‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் டப்பிங் இனிதே துவங்கியது…

பெரும் கொண்டாட்டத்தோடு #குண்டு படத்தை ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களையும் , நிகழ்வுகளையும் உண்மையின் பக்கம் நின்று ஜனரஞ்சகமாக அனைவரும் ரசித்து கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இன்று படத்தின் டப்பிங் பணிகளை துவங்குகிறோம்.

தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பின் இரண்டாவது தயாரிப்பு தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஒரு படைப்பாக இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இயக்குனர் அதியன் ஆதிரை வட தமிழகத்தின் வாழ்வியலை அனைவரும் குடும்பமாக ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார்.

மகிழ்ச்சி….!