ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். நாளை டெல்லி பயணம்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிமுகவின் பொது செயலாளராக சசிகலாவை நியமனம் தொடர்பான பிராமண பத்திரங்களை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இருஅணியினரும் தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரங்கள் வாபஸ் பெறுவது என்பது அதிமுகவின் அடுத்த கட்டநகர்வாக பார்க்கப்படுகிறது. அதிமுக எம்,பிக்கள் மற்றும் எம்,எல்,ஏ க்களிடம் இதுகுறித்து ஏற்கனவே கையெழுத்து பெறப்பட்டு விட்டதாகவும்,

மேலும் அதிமுகவின் பொதுகுழு கூடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு முதல்வரும், துணை முதல்வரும் டெல்லி செல்லுவது இதுவே முதல் முறையாகும்.