150 பேருக்கு அழைப்பு 10 கோடியில் திருமணம்

Paisa upcoming movie

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவும், பிரபல நடிகை சமந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 29ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து, வருகிற 6-ம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.  நாக சைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர், சமந்தா கிறிஸ்தவர். எனவே, இரு மத சம்பிரதாயப்படி திருமணம் நடக்கிறது. கோவாவில் நடக்கவிருக்கும் இந்த திருமணம் முதல் நாள் இந்து முறைப்படியும், அடுத்தநாள் கிறிஸ்தவ முறைப்படியும் நடக்க உள்ளது. இதற்காக, இரு வீட்டாரும் கடந்த 1ஆம் தேதியே கோவா சென்று கல்யாண வேலைகளை மும்முரமாக செய்துகொண்டிருக்கின்றனர்.   இந்த திருமணத்திற்கு மொத்தம் 150 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம். ரூ.10 கோடி செலவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தை தொடர்ந்து, ஹைதராபாத்தில் 10ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.