அப்துல்கலாம் பெயரில் கோவையில் பல்கலைகழகம் துவக்கம்

அப்துல்கலாம் உலகளாவிய அறக்கட்டளையில் செய்தி தொடர்பாளர் தமீமுல்அன்சாரி கூறுகையில், அப்துல் கலாம் பெயரில் கோவையில் பல்கலைக்கழகம் துவங்கப்படுகிறது. பனாமா நாட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தின் தமிழக பிரிவு இது என்றும், துவக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், கேரள முதல்வர் கலந்து கொள்கின்றனர். அப்துல் கலாம் அவர்கள் அறக்கட்டளை சார்பில் பல்துறை வித்தகர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.