தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி, 16 அடி  பாயும் என்பர். ஆனால் ஸ்டாலினோ, 64 அடி பாய்ந்து விட்டார்.

 

 

சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துரைமுருகன் “தேர்தல் நேரத்தில், தி.மு.க.,வை தாக்கி எழுதிய பத்திரிகைகள் எல்லாம்,முரசொலி பவள விழாவில், கருணாநிதி, ஸ்டாலினை பாராட்டி பேசியதை படிக்கும் போது, எனக்கு பெருமையாக இருக்கிறது. இது, ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி. இனிமேல், ஸ்டாலினுக்கு கிடைக்கும் வெற்றி அனைத்தும் எளிதாக அமைந்து விடும்; அவரை யாராலும் வீழ்த்த முடியாது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி, 16 அடி தான் பாயும் என்பர். ஆனால், ஸ்டாலினோ, 64 அடி பாய்ந்து விட்டார். எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை, ஸ்டாலின் நினைத்தால் கொண்டு வர முடியும்; அவரால் முடியாதது ஒன்றுமில்லை.” இவ்வாறு அவர் பேசினார்.