குடிக்காக மனைவியை அடித்து கொன்ற கணவன்

காசிமேடு சி.ஜி.சாலை 3-வது தெருவை சேர்ந்தவ் இதயராஜ். மீனவர். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இதயராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 16ஆம் தேதி இரவு மனைவியிடம் இதயராஜ் மதுகுடிக்க பணம் கேட்டார்.

அவர் பணம் இல்லை என்று கூறியதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த இதயராஜ், நந்தினியை தாக்கினார். இதில் மாடிப்படியில் விழுந்த நந்தினிக்கு தலையில் பலத்த அடிபட்டு காதில் இருந்து ரத்தம் வந்தது. மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நந்தினி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயராஜை கைது செய்தனர்.