இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது – கமல்

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தன் புகைப்படத்தை கத்தியால் கிழிக்கும் சிறுவன் குறித்து நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர்.

என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.