திமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி

நீட் தேர்வுக்கு தடை கோரி திமுக சார்பில் நாளை நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடினால் எவ்வாறு தடை விதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமைதிவழியில் நடக்கும் போராட்டத்தை எவ்வாறு தடுக்க முடியும் என்றும் கேட்டுள்ளார்.

மேலும் காவல்துறை அனுமதி தரவில்லை என்பதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. திமுக போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.