கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை – சாலைகளில் வெள்ளப்பெருக்கடுத்து ஒடிய மழை நீர்

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் லேசான தூறல் மழை பெய்து வந்தது. சுமார் 3 மணிநேரம் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாலையில் தீடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

தொடர்ந்து சாரலாக பெய்து வருகிறது. கோவில்பட்டி மட்டுமின்றி எட்டயபுரம், கழுகுமலை, கயத்தார், கடம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. காலையில் இருந்தே மழை பெய்து வருவதால் கோவில்பட்டி நகரில் புதுரோடு, மாதங்கோவில் ரோடு மற்றும் மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் பல இடங்களில் மழையின் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.