வேளச்சேரியில் அமைந்துள்ள பீனிக்ஸ் மாலில் புதிய சுல்தான் பிரியாணி விற்பனை நிலையம் தொடக்கம்

 
பால் சன்ஸ் குழுமத்தினர், சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள பீனிக்ஸ் மாலில் தங்களது புதிய சுல்தான் பிரியாணி விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளனர்.
 
சுல்தான் பிரியாணி இப்போது சென்னையின் மிகவும் விரும்பப்படும் பிரியாணி பிராண்டாக உருவெடுத்துள்ளது. மேலும், சுல்தானின் தனித்துவமான சுவை, மக்களிடையே மேலும் கடையின் விரிவாக்கத்திற்கான கோரிக்கைக்கு வழிவகுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே தொடங்கப்பட்ட இரண்டு தொடர்ச்சியான விற்பனை நிலையங்களுக்கு நகர மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, அவர்களது வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இப்போது ஒரு பிரீமியம் மாலில் தொடங்கி இருக்கிறார்கள். 
 
இந்த கடையின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.யுவராஜ் மற்றும் திரு.முத்து ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தனர். இவ்விழாவில் டாக்டர்.சாம் பால், பால் சன்ஸ் குழுமத்தினர் மற்றும் சுல்தான் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.