முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒய்யார நடையுடன் நடந்த பிரவோலன் ஃபேஷன் வீக் (Day 2)

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகருமான ஸ்ரீசாந்த் சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்டு அசத்தினர். ஶ்ரீசாந்தின் ஒய்யார நடையை பார்த்த பார்வையாளர்கள் உரத்த குரல் எழுப்பி ஆரவாரம் செய்து அசத்தினார்.

பிரவோலன் பேஷன் வீகின் இரண்டாம் நாள் நிகழ்வு, நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை ஐ.டி.சி கிராண்ட் சோலாவில் மிகுந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் மூலம் வந்த வருவாயை, பிரோவாலியன் ஈவென்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரபா விவசாயிகளின் நலனுக்காக வழங்கினார்.

கண்களை கவரும்வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வை பிரபல நடன இயக்குனர் சமீர் கான் தொகுத்து நடத்தினார்.

பேஷன் நிகழ்வின் இரண்டாம் நாளில் பங்கேற்ற வடிவமைப்பாளர்களில் ரினு அலுங்கல், ரூபா பாட்டீல், சத்கிருத், ஹீனா கவுசர், சவுரவ் மஜும்தர், ரேஷ்மா குன்ஹி மற்றும் ஹரி ஆனந்த் ஆகியோர் அசத்தினர்.

சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களின் உடைகளுக்கு சனம் ஷெட்டி, ஸ்ரீ ரெட்டி, சாக்ஷி அகர்வால், கணேஷ் நிஷா, ஹுமா குரேஷி, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீசாந்த், மிஸ் சவுத் இந்தியா கோமல் ஷர்மா, அனாகா மருத்தாரா மற்றும் ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட நேர்த்தியான மாடல்களால் உயிருட்டப்பட்டன.

சமூக பிரச்சினைகளுக்காக பிரவோலியன் வீக் நடத்திய இந்த பிரமாண்ட பேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை முழு உற்சாக தொடக்கத்தை அளித்தனர்.