கோவில்பட்டி அருகே வைக்கோல் படப்பில் தீ விபத்து

கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் ப்ரகாஷ்கண்ணன்(40) விவசாயியான இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். தனது மாடுகள் உணவிற்காக வீட்டு அருகே வைக்கோல் படப்பு வைத்து பராமரித்து வந்த நிலையில், இன்று ப்ரகாஷ்கண்ணன் வைக்கோல் படப்பிற்கு அருகேயுள்ள தனி நபருக்கு சொந்தமான இடத்தில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அப்போது, அங்குள்ள குப்பைகளுக்கு தீ வைத்த போது, அதில் இருந்து தீடீரென வைக்கோல் படப்பில் பட்டு , தீ கொளுந்து விட்டு எரிந்தது.

மேலும் இந்த வைக்கோல் படப்பிற்கு அருகேயுள்ள சுப்பையா என்பவரது மனைவி காளியம்மாள்(62) வைக்கோல் படப்பிற்கும் தீ பரவியது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தி, மற்ற இடங்களுக்கு பரவ விடமால் தடுத்தனர். இருப்பினும் ப்ரகாஷ் கண்ணனுக்கு சொந்தமான வைக்கோல் முழுவதுமாகவும், காளியம்மாள் வைக்கோல் படப்பு ஒரு பகுதியையும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.