கோவில்பட்டி அருகே அடுத்தடுத்து 3 ஆலைகளில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள், பொருள்கள் எரிந்து நாசம்

கோவில்பட்டியை சேர்ந்தவர் ரத்தினபிரகாஷ். இவர் சங்கரலிங்கபுரத்தில் கால்நடைமாட்டுதீவனம் தயாரிக்கும் ஆலை மற்றும் ஆயில் எண்ணெணெய் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகின்றார். இன்று காலையில் அவரது கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலையில் இருந்து பயங்கர தீயுடன் கரும்புகை வந்துள்ளது. அருகில் இருந்த இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் விரைந்து வராத காரணத்தினால் கால்நடை மாட்டு தீவனம் தயாரிக்கும் ஆலையில் பிடித்த தீ தொடர்ந்து அருகில் இருந்த ஆயில் தயாரிக்கும் ஆலைக்கும், அடுத்துள்ள கார்த்திக் என்பவருக்கு சொந்தமான மர அறுக்கும் ஆலைக்கும் பரவியது. இதனால் தொடர்ந்து பயங்கர தீயும், அந்த பகுதி முழவதும் கரும்புகையுடன் காட்சியளித்தது. மக்கள் தகவல் கொடுத்து மெதுவாக வந்து ஒரே ஒரு தீயணைப்பு வண்டியை வைத்து வீரர்கள் தீயை அணைக்கு முற்பட்டனர். ஆனால் தீ கட்டுக்குவரமால் தொடர்ந்து எரிந்து கொண்டு வருகிறது. இதனால் தீயை அணைக்க கழுகுமலை, சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காலை நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் வாரத காரணத்தினால் ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள், பொருள்கள் எரிந்து நாசமானது.