சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகள் போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், விவசாய கடன் தள்ளுபடி போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த விவசாயிகள் மனித எலும்புகள், ஏர்கலப்பை உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு முழக்கமிட்டதோடு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். தங்களது கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றாவிட்டால் அவருக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.