போலி பெண் டாக்டர் ஈரோட்டில் கைது

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த பிரேமலதா என்பவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுகாதார துறையினர் அவரது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், பிரேமலதா முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரேமலதாவை கைது செய்தனர்.