ஒரு புன்னகையை ஒளிரச் செய்து கொண்டாட குடும்பம் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி விருந்து நிகழ்ச்சி

Madras metro round table 95 மற்றும் Madras metro பெண்கள் வட்டம் 70 ஆகியவை தொடர்ந்து 2 வது ஆண்டாக ஏற்பாடு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றன. “ஒரு புன்னகையை ஒளிரச் செய்து கொண்டாட குடும்பம் இல்லாத 200 குழந்தைகளுக்கான தீபாவளி விருந்து இந்த நிகழ்வு.

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பரிசுகளை தீபாவளியின்போது வழங்கி கொண்டாடுகிறோம், இந்த பாக்கியம் இல்லாத பலர் இருக்கிறார்கள் என்பதை அந்த தருணத்தில் உணர்ந்தோம். வளங்களைக் கொண்ட ஒரு அமைப்பாக, இதைத் தவறவிடக் கூடிய குழந்தைகளுக்கு ஒரு புன்னகையை வெளிச்சமாக அளிக்க முடிவு செய்தோம். அவர்களின் புன்னகை முகங்களைக் காண இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதைத் தொடர விரும்புகிறோம்.

இந்த நிகழ்வு நவம்பர் 21, சென்னை இ ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு குழந்தைகள் முதலில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியைக் காண்டு ரசித்தனர். பின்னர் அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க ஒரு டி.ஜே.வுடன் நடன தளம் அமைக்கப்பட்டு நடனங்கள் ஆடி மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைகள் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தீபாவளி பரிசுப்பொருட்களை பெற்று கிளம்பிச்சென்றனர்.