எலெக்ட்ரிக் பேருந்து சோதனை ஓட்டம்

சென்னை பல்லவன் இல்லத்தில் எலெக்ட்ரிக் பஸ் பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் போக்குவரத்தை நவீன படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு சுகமான பேருந்து சேவைகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் எலெக்ட்ரி பஸ் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில் பேருந்து மிக நல்ல முறையில் இயக்குவதை பார்த்தோம்.

இனி வரும் காலங்களில் அம்மா அவர்களின் அரசானது இந்த பேருந்துகளை முழுவதும் நடைமுறைபடுத்த மிக விரைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தற்சமயல் சோதனை ஓட்டத்தில் ஒட்டப்பட்ட பேருந்தானது ஏ.சி. இல்லாத பேருந்து எங்கள் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார் ஏ.சி.உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறிய அமைச்சர், பிளாஸ்டிக் அரிசி பற்றிய கேள்விக்கு அப்படிபட்ட அரிசியை இது வரை யாரும் கண்டதில்லை அதுவெறும் வதந்தியாகத்தான் இருக்கமுடியும் என்று கூறினார்.