மழையால் கைவிடப்பட்டது இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டி.20 போட்டி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கடைசி போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. கடைசி டி.20 போட்டி இன்று ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஐதராபாத்தில் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் பிட்சில் ஈரப்பதம் குறையாததால் போட்டி கைவிடப்பட்டுள்ளது.