எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவிற்கு பொருளாதார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்டுக்கு 480 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கும் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் துறைமுக வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இதுகுறித்து திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என்று தெரிவித்தார்.