டி.டி.வி.தினகரன் உருவபொம்மை எரிப்பு

 

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அதிமுகவில் தலைமை அலுவலகத்தின் அருகே டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவின் உருவ பொம்மையை
தொண்டர்கள் சிலர் எரித்தனர்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் உடனடியாக
தொண்டர்களையும், எரிக்கப்பட்ட உருவ பொம்மையையும் அப்புறப்படுத்தினர். கட்சியின் தலைமை அலுவலத்தில் உள்ளே ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் வெளியே தொண்டர்கள் திடீர் என்று உருவ பொம்மை எரித்த நிகழ்வானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.