தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. (அம்மா) சார்பில் வருகின்ற 16ஆம்தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் தினகரன் அறிவித்தார். இந்நிலையில், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்துள்ளது. 16ஆம்தேதி வேறு ஒருவருக்கு அனுமதி தந்துள்ளதால், தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தர இயலாது என தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார். தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், சசிகலாவால் அதிகாரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை பழிவாங்குவதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.