கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெயிஷா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனை கண்டிதது தமிழகம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெயிஷா மீதான ஊழல் குற்றச்சாட்டை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் கேசவன், மாவட்ட துணை தலைவர் திருப்பதிராஜா, நகர தலைவர் சண்முகராஜ் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.