ரூபாய் 36.75லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

மலேசியா தலை நகர் கோலம்பூரிலிருந்து இன்று காலை 9.45 மணிக்கு திருச்சி வந்த மாண்டோ விமானத்தில் வந்த பயணிகளை ரகசிய தகவலின் பேரில் மத்திய வான் ஙண்ணறிவு  பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை  சேர்ந்த ஸ்ரேயாஸ் அகமது  என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது அவர் மறைத்து எடுத்து வந்த 1250 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  இதன் மதிப்பு ரூபாய் 36.75லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.