முதல்வர்- சரத்குமார் சந்திப்பு

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளார்.  சந்திப்பிற்கு பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதிமுக அணிகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு.  தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படைத் தாக்குதலை தடுக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. முதல்வரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்துப் பேசினேன்’ என தெரிவித்தார்.