சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டனியில் மீண்டும் ‘முந்தானை முடிச்சு’

37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌உருவாகும்‌ k.பாக்யராஜ் ன் ” முந்தானை முடிச்சு ” சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பெரும் வெற்றியடைந்த “சுந்தரபாண்டியன்”, விரைவில் திரைக்கு வரவுள்ள “கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களுக்கு பிறகு மீண்டும் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் இணையும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்க படுவார்கள் என தயாரிப்பாளர் JSB சதீஷ் தெரிவித்தார்.