“மாவீரன் காடுவெட்டியார்” என்ற பெயரில் திரைப்படமாக தயாராகும் காடுவெட்டி ஜெ.குரு வின் வாழ்க்கை வரலாறு

தமிழ்த்தாய் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பெரிய பொருட்செலவில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு வின் வாழ்க்கை வரலாற்றை “மாவீரன் காடுவெட்டியார்” என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறார்கள்.

ஜெ. குரு வின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்ததோடு, அவரின் ஆதரவாளர்கள் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னணி நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

காடுவெட்டி ஜெ. குரு வின் மகன் கனலரசன் மேற்பார்வையில் கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை இளம் இயக்குனர் ஒருவர் இயக்குகிறார்.
அனைத்து சமூகத் தலைவர்களும் இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சூழ்ச்சியையும் பகையையும் வீழ்த்தி வாகை சூடும் வகையில் கதை அமைப்புடன் “மாவீரன் காடுவெட்டியார்” படம் உருவாகிறது. மக்கள் தொடர்பாளராக வி .எம் .ஆறுமுகம் பணியாற்றுகிறார்.