நாகை மாவட்டம் பொறையாரில் பேருந்து பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்

தரங்கம்பாடி அருகில் உள்ள பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் ஓய்வறையில் பணிமுடித்த நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் 20 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடினர்.

தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு காயம் அடைந்த சிலர் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.