தமிழிசை உருவ பொம்மையை எரித்த 21 விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது -கோவில்பட்டி

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்த விமர்சனத்திற்கு விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்துகள் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சில கருத்துக்களை கூறினார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்கைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் தமிழிசை சௌந்தர்ராஜன் உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் குறித்தும் கேள்விப்பட்டதும் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 21 விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.