தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜினாமா

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை சரியில்லாததால் தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் 2001 முதல் 2006ஆம் வரை கூடுதல் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் தலைமை வழக்கறிஞராக பதவியேற்றார். தற்போது 70 வயதாகும் இவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.