நண்பர்கள் உதவியும் செய்வார்கள் கொலையும் செய்வார்கள் – அடங்காமை

Vores picture அடங்காமை

“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” குறள்

மூன்று சிறுவயது நண்பர்கள். இவர்கள் பெரியவர்கள் ஆனதும் இவர்கள் நட்பு தொடர்கிறது. ஒருவர் அரசியல்வாதி, ஒருவர் நடிகர், ஒருவர் டாக்டர்.

டாக்டரின் காதலியின் அக்கா, வளர்ப்பு தகப்பனார், இருவரும் கொலைசெய்யப்பட்டு இறந்து விடுகின்றனர். இந்த நிலையில் டாக்டர் கொலையாளிகளை கண்டு பிடிக்க தனது நண்பர்களை உதவிக்கு நாடுகிறார். நண்பனுக்கு நண்பர்கள்உதவி செய்கிறாரர்களா? என்று பார்த்தால் இறுதியில் கொலையாளிகளே நண்பர்கள்தான் என்பதை டாக்டர் அறிகிறார்.

ஒரு நண்பன் எப்படி இன்னொரு நண்பனை பழிவாங்க முடியும் ? அது உண்மையான நட்புக்கு அழகல்ல ஆனால் இயற்கை தீயோரை வாளவிடாது என்பதே கதை.
எழுத்து இயக்கம் : R. கோபால்
ஒளிப்பதிவு : வெற்றி
இசை : கியூரன் (டென்மார்க் )
தயாரிப்பு : புலேந்திரராசா பொன்னுதுரை (டென்மார்க்)
மைக்கேல் ஜான்சன்