விவசாயிகள் குறித்து வேதனையாக பேசிய நடிகர் விஜய்

Anjala Audio Launch

விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும் என்றும் வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நடிகர் விஜய் கூறியுள்ளார். சென்னையில்  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய்,  நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை என கவலை தெரிவித்தார். 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டதாக கூறிய விஜய், நாளை தலைமுறைக்கு உணவு கிடைக்கவேண்டிய அவசியம் குறித்தும் பேசினார். மூன்று வேளை உணவு எளிதில் கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டதாகவும், அரிசியை உற்பத்தி செய்து விட்டு அதனை இலவசமாக வாங்குவதற்காக விவசாயிகள் ரேஷன் கடை வரிசையில் நிற்கிறார்கள் என்றும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட எனவும் விஜய் குறிப்பிட்டார்.