ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினி

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 14 மாவட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். ரஜினியின் அரசியல் முன்னோட்டமாகவே அந்த சந்திப்பானது பார்க்கப்பட்டது. அப்போது தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், போர் வரும் போது வருவேன் என கூறி புதிய திருப்பம் ஒன்றை ஏற்படுத்தினார் ரஜினி.

தொடர்ந்து காலா மற்றும் எந்திரன் படபிடிப்புகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்த ரஜினி, டிசம்பர் மாத இறுதியில் தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. 25-ம் தேதி முதல் இந்த மாத இறுதி வரை அவர் ரசிகர்ளை சந்திக்கிறார். மொத்தம் 18 மாவட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதன் படி இன்று காலை 8 மணி அளவில் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.