ரசிகரின் இறுதி அஞ்சலிக்கு சென்ற நடிகர் கார்த்தி

திருவண்ணாமலையை சேர்ந்த ஜீவன் குமார்,  நேற்று நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது. பலத்த காயம் அடைந்த  நான்குபேரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். 

இதில் ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதில் பலியான 27 வயதான இளைஞர் ஜீவன்குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இவர், நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஆவார். இந்த தகவல் அறிந்து நடிகர் கார்த்தி திருவண்ணமலைக்குநேரில் அஞ்சலி செலுத்த சென்றார். தனது ரசிகரின் உடலைப் பார்த்ததும் கார்த்தி கதறி அழுதார். அப்போது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக திரளாக வந்திருந்த மாவட்ட நிர்வாகிகளும், ரசிகர்களும் நடிகர் கார்த்தியின் கதறலைப் பார்த்து கண் கலங்கினர்.