பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்

“ஹரஹர மஹாதேவகி”, “ஏ சின்ன புள்ள என்ன மச்சான்” போன்ற பிரபலமான பாடல்களை கொடுத்து இளைஞர்களின் நாடித்துடிப்பை சரியாக புரிந்து வைத்திருக்கும் பிரபல இசை அமைப்பாளரான அம்ரிஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த சமூகத்திற்கு
நல்லவற்றை விதைக்கும் நோக்கத்தில் பிறந்தநாளை முன்னிட்டு மாங்கன்றுகளும் மருதாணி செடிகளும் நட்டு உள்ளார். கொரோனா காலத்தில் மக்களையும் ரசிகர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அம்ரிஷ்ஷை மென்மேலும் வளர, ரசிகர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.