8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து பேங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணிகள் அயூப்கான் மற்றும் முருகேசன் இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அவர்கள் இருவரிடமும் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.