இந்தத் தொடக்க விழா, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு நிகரான பொழுதுபோக்கை வழங்க உள்ளது
உலகெங்கிலுமுள்ள ரசிகர்கள் ஜூலை 1 முதல் புக்மைஷோ (BookMyShow) இல் டிக்கெட்டுகளை வாங்கலாம்
சென்னை, ஜூலை 03, 2026: லங்கா பிரீமியர் லீக் 2026 பிரமாண்டமான முறையில் தொடங்கவுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் போட்டியை ஒட்டி நடத்தப்படும் நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இதுவரை கண்டிராத மிகப்பிரம்மாண்டமான மற்றும் லட்சியம் மிக்க நிகழ்வுகளில் ஒன்றாக உருவாக்குகின்ற வகையில், இந்த தொடரின் நிகழ்வு உரிமையாளரான IPG குழுமம், SSC கொழும்பில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு பிரமாண்டமான 500 ட்ரோன் கொண்ட காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த LPL 2026-க்கான டிக்கெட்டுகள் ஜூலை 1 முதல் BookMyShow மூலம் கிடைக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளவும், இலங்கை ரசிகர்களுக்கு ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வு பாணியிலான அனுபவத்தை வழங்குகின்ற உயர்-தீவிர டி20 கிரிக்கெட் ஆட்டத்தையும் ஒரு கண்கவர் காட்சியையும் இணைக்கும் சிறப்பான தொடக்க நாள் இரவில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இலங்கையின் முதன்மையான டி20 ஃபிரான்சைஸ் அணிக்கு ஒரு மறக்கமுடியாத தொடக்கத்திற்காக கிரிக்கெட் ரசிகர்கள், குடும்பங்கள், ஃபிரான்சைஸ் ஆதரவாளர்கள், பொழுதுபோக்கு பார்வையாளர்கள் மற்றும் டிஜிட்டல் பார்வையாளர்களை ஒன்றிணைக்கின்ற வகையில், லங்கா பிரீமியர் லீக் இன் ஆறாவது பதிப்பிற்கான போக்கை அமைக்க இந்த துவக்க விழா எதிர்பார்க்கப்படுகிறது.
ஒத்திசைக்கப்பட்ட 500 ட்ரோன்கள் இரவு வானை ஒளிரச் செய்யவிருக்கும் இந்த நிகழ்ச்சி, இலங்கை கிரிக்கெட், இதில்
பங்கேற்கும் அணிகள், டி20 கிரிக்கெட்டின் துடிப்பு மற்றும் ஒரு பிராந்திய அளவிலான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வாக LPL-இன் வளர்ந்து வரும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையிலான ஒரு பிரம்மாண்டமான காட்சி விருந்தாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
உயர்தரமான கிரிக்கெட் மூலம் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள முன்னணி பிராஞ்சைஸ் லீக்குகளுடன் போட்டியிடக்கூடிய அரங்க பொழுதுபோக்கு, ஒளிபரப்பு ஈர்ப்பு மற்றும் நிகழ்வு தயாரிப்பு தரங்கள் மூலமாகவும் LPL தொடர்பான ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதில் IPG குழுமத்தின் தொடர்ந்த கவனத்தை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.
IPG நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் அனில் மோகன், இந்த தொடக்க விழா ஏற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “லங்கா பிரீமியர் லீக் என்பது கிரிக்கெட்டை மட்டும் பற்றியதல்ல. அது ரசிகர்கள் நினைவில் கொள்ளும் ஓர் அனுபவத்தை உருவாக்குவதைப் பற்றியதாகும். இந்த ஆண்டு, இந்த போட்டியின் ஆற்றல், லட்சியம் மற்றும் வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்வுடன் LPL. 2026-ஐ தொடங்க நாங்கள் விரும்புகிறோம். இந்த 500 ட்ரோன்கள் கொண்ட நிகழ்வு, இலங்கைக்கு ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்வுக்கான உணர்வைத் தருவதோடு, தொடக்க நாள் நிகழ்வில் பங்கேற்பதற்கு ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான காரணத்தையும் அளிக்கும்..” என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த தொடக்க விழா பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களையும், பரந்த பொழுதுபோக்கு விரும்பிகளையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“LPL தொடக்க விழாவை ஒரு கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும். குடும்பங்கள், இளம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் மைதானத்திற்கு வந்து, அந்த சூழ்நிலையை ரசித்து, இலங்கை கிரிக்கெட்டை புத்துணர்ச்சியூட்டும் உற்சாகமான முறையில் கொண்டாடும் ஒரு இரவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். LPL ஐ ஒரு முழுமையான பொழுதுபோக்கு அறிவுசார் சொத்தாக உருவாக்குவதே இதன் நோக்கம்,” என்று மோகன் கூறினார்.
லங்கா பிரீமியர் லீக் இயக்குனர் சமந்தா தொடன்வெலா கூறுகையில், “SSC கொழும்பில் நடைபெறும் இந்த முதல் LPL போட்டி, இந்த போட்டித் தொடருக்கு ஒரு முக்கியமான தருணமாகும், மேலும் திட்டமிடப்பட்டுள்ள 500 ட்ரோன் காட்சி, ரசிகர்களுக்கு தொடக்க இரவை இன்னும் மறக்கமுடியாததாக மாற்றும். LPL போட்டியானது கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டையும் இணைக்கும் ஒரு தளமாகத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது, மேலும் இத்தகைய அனுபவங்கள், மேலும் பலரை கிரிக்கெட்டிற்கு நெருக்கமாக கொண்டு வர உதவுகின்றன. கிரிக்கெட் ஆர்வலர்கள், குடும்பத்தினர் மற்றும் இளம் ரசிகர்கள் அனைவரும் இந்த தொடக்க விழாவில் பங்கேற்று, LPL 2026-க்கு உற்சாகமான தொடக்கமாக அமையவிருக்கும் இந்த நிகழ்விற்கு ஆதரவு அளிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்.” என்று கூறினார்.
இந்த லங்கா பிரீமியர் லீக் 2026 இன் தொடக்க விழா, ஐந்து போட்டித்திறன் மிக்க உரிமைக்குழுக்கள், முன்னணி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சர்வதேச டி20 திறமைகளைக் கொண்ட இந்த பருவத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கும். அதிக தீவிரமான கிரிக்கெட் மற்றும் வளர்ந்து வரும் உரிமைக்குழு போட்டியாளர்களின் போட்டிகளை வழங்கும் ஆட்டங்களுடன் இந்த போட்டி நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடையே வலுவான ஆர்வத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.

