மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் நடிப்பில் வெளியான படம் வாய்தா.

சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த மு.ராமசாமியை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தால் இடித்துவிடுகிறார். இதனால், அந்த முதியவருக்கு வலது கை உடைந்து விடுகிறது. இந்த விபத்து சம்பத்தில் இருவருக்குத் தொடர்பிருக்கிறது. அந்த இருவருக்கும் இருக்கும் ஈகோவால விபத்து சம்பவம் பெரிதாகிறது. பிரச்சினை காவல் துறை, நீதிமன்றம் வரை செல்கிறது. பெரியவர் பகடைக் காயாக்கப்படுகிறார். நீதிமன்றத்தின் வாய்தா அவர்களை பாடாய் படுத்த, இறுதியில் அந்தப் பெரியவருக்கு விபத்திற்கான இழப்பீடு கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் எளிமையும் யதார்த்த இயல்பும் கவர்கிறது.

ராமசாமிக்கு அந்தப் பாத்திரம் கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. எதார்த்தமான நடிப்பில் நம் மனதை கொள்ளை கொள்கிறார் நாயகியாக நடித்திருக்கும் பவுலின் ஜெசிகா.

சிறப்பு தோற்றத்தில் நாசர் எப்போதும் போல் நடிப்பு சூப்பர்.

பாடல்களும், காட்சிகளும் சிறப்பு.