கல்வித்துறையில் 42 புதிய கொள்கை அறிவிப்புகள் – செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக 42 புதிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடப்போவதாக கூறியிருந்தார். ஆனால், அதற்குள் தமிழக அரசுக்கே நெருக்கடி ஏற்படும் வகையில் தினகரனுக்கு ஆதரவான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து இன்று 4 மணிவரை தமிழக கல்வித்துறை சார்பிலான புதிய அறிக்கை வரவே இல்லை. செங்கோட்டையனும் கவலையில் இருப்பதாக கூறப்பட்டது.

அனேகமாக சட்டசபை கூடுவதற்கு முன்பே ஆட்சி கவிழும் என்ற நிலை இருந்தாலும், செங்கோட்டையன் தனது வரலாற்று சாதனையாக புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் குறித்து செங்கோட்டையன் கூறும்போது, நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளாக இருக்கும் என்றார்.