கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகடையில் 1 லட்ச ரூபாய் திருட்டு

\கோவில்பட்டி கருணாநிதி நகரைச் சேர்ந்த குருசாமி என்பவரது மகன் ராஜன்(46), நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் காய்கறிகடை வைத்து நடத்தி வருகின்றார். இன்று காலையில் தனது கடையினை திறக்க ராஜன் சென்ற போது கடை திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த மேஜையை உடைத்து அதில் இருந்து 1லட்ச ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

மேலும் கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா சர்வரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.