ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்

2வது நாளாக சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் ரஜினி, ‘ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார். கடந்த மே மாதம் நடிகர் ரஜினிகாந்த் முதல்கட்டமாக, தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இபோது 2வது கட்டமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று 2வது நாளாக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் 

அப்போது பேசிய  ரஜினி, “ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். உங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு குடும்பம் தான் முக்கியம், முதலில் குடும்பத்தைக் கவனியுங்கள், பிறகு தான் மற்றது எல்லாமே!”  என்று ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ் செய்தார்.முன்னதாக வீட்டில் இருந்து கிளம்பிய போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்னும் நான்கு நாட்கள் காத்திருங்கள்” என்றார்.