மீம்ஸ் கிரியேட்டர்ஸை புகழ்ந்த மஞ்சிமா மோகன்

மீம்ஸ் போட்டு கலாய்த்து விடுவார்கள் இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ். ஆனால் நடிகை மஞ்சிமா மோகன் மீம்ஸ் போடுபவர்களை புகழ்ந்து தள்ளி உள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா. தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமூகவலைத்தளம் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு விடையளித்த அவர், காலையில் நான் கண் விழித்ததும் முதலில் தேடுவது என் மொபைலை தான். சமூக பிரச்னைகளை விமர்சித்து மீம்ஸ் போட தனி திறமை வேண்டும். மீம்ஸ் போடுபவர்கள் அறிவாளிகளாகவும், அதிக கற்பனை திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என நினைக்கிறேன். ரசிகர்களுடன் உரையாடும் போது விஜய், அஜித் இருவரில் யாரை பிடிக்கும் என கேட்கும் கேள்வி தான் விடையளிக்க மிகவும் கடினமான ஒன்று. எனக்கு எதிராக பேசுபவர்களை நான் கண்டுகொள்வதில்லை. பாகுபலி 2, விக்ரம் வேதா மற்றும் மாநகரம் ஆகியவை எனக்கு பிடித்தமான படங்கள் என்றார்.