மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வருகை

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகிய இருவரையும் சந்தித்து ஆசி பெறுவதற்க்காக மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வருகை புரிந்தார். மடத்தில் ஆசி பெற்ற பின்னர் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்
வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரேத ஆயுத கடத்தல் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க தகுந்த நடவடிக்கை களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், ஆயுதகடத்தல் சம்பந்தமாக தமிழக போலீஸார் சில பேரை கைது செய்தது பாராட்டுக்குரியது என்றும், அதற்கான தகவலை அரசின் உளவுத்துறை தான் வழங்கியது என தெரிவித்தார்.