கொளுத்தும் வெயிலுக்கு பழனியில் யானை பலி

Elephant blessing

பழனியில் வெயில் கொடுமை தாங்காமல் யானை ஒன்று உயிரிழந்தது. சில மாதமாக யானைக்கு உடல் நலக்குறைவாக இருந்த யானைக்கு  கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே யானை மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. இதனால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் பழனி சண்முகாநதி அருகே யானையை அடக்கம் செய்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தெரிய வரவே தோண்டி யானையை பிரேத பரிசோதனை நடத்தி மீண்டும் அதே இடத்தில் புதைத்தனர்.இது குறித்து வனச்சரகர் கணேசன் தெரிவிக்கையில், யானை ஏற்கனவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.வெயில் கொடுமை அதிகரிக்கவே யானை உயிரிழந்துள்ளது. இறந்த யானைக்கு கல்லீரல், கணையம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது என்றார்.