கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போலீஸ் குடியிருப்பு பெண்கள்- ஏலச்சீட்டு குறித்து புகார்-

commisoner officeசென்னை புதுப்பேட்டை நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் குடும்ப பெண்கள் ஏராளமான பேர் நேற்று திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சப்–இன்ஸ்பெக்டர், ஒருவரின் மனைவி ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி கொடுக்காமல் தப்பி ஓடிவிட்டதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்திய போலீஸ் குடும்பத்து பெண்கள், தப்பி ஓடிய சப்–இன்ஸ்பெக்டர் மனைவியை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழந்த பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கமிஷனர் அலுவலக அதிகாரிகள், குறிப்பிட்ட சப்–இன்ஸ்பெக்டரின் மனைவியை தேடி வருவதாகவும், அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தனர். மாலை வரை போராட்டம் நடத்திய போலீஸ் குடும்பத்து பெண்கள் பின்னர் கலைந்து சென்றனர்