ஒதுங்கிக் கொண்ட ஓவியா

கெளதம் கார்த்திக் நடித்த படம் ‘ஹரஹர மஹாதேவகி’ என்கின்ற படம். முழுக்க முழுக்க இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட அந்தப்படம் ‘அடல்ட்ஸ் ஒன்லி’ ரக படமாகவே இருந்தது என பல்வேறு விமர்சனங்கள் வந்தன. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அந்தப்படத்தைத் தயாரித்து இருந்தது.

இந்தநிலையில் கெளதம் கார்த்திக் மீண்டும் ‘அடல்ட்ஸ் ஒன்லி’ ரக பாணியில் தலைப்பு அமைந்துள்ள ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்கிற படத்தில் நடிக்கத் தயாராகி இருக்கிறார். சந்தோஷ் ஜெயக்குமார் என்பவர் இயக்க இருக்கிறார். அதில் முதலில் ‘பிக்பாஸ்’ மூலம் ஓவர்நைட்டில் பிரபலமான ஓவியா நடிப்பார் எனத் தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது அவர் அதில் நடிக்கவில்லையாம். அவருக்குப் பதில் ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்கை போடு போடு ராஜா’ ஆகிய படங்களில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கின்ற வைபவி சந்தில்யா என்கிற நடிகை நடிக்கவிருக்கிறார் எனத் தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.