என்.எஸ்.சி. போஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு

International_terminal,_Netaji_Subhash_Chandra_Bose_International_Airport_02

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இன்று காலை பி.எஸ்.என்.எல். இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக விமானத்தில் இருக்கும் பைலட்டை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கம்ப்யூட்டர்களையும் பயன்படுத்த முடியாததால் விமான நிலைய ஊழியர்கள் வேலை செய்ய முடியாமல் திணறினர்.

உடனே பி.எஸ்.என்.எல். அதிகாரிகளை விமான நிலைய ஊழியர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, விமான நிலையத்தின் ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு இணைப்பில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் அது சரிசெய்யப்பட்டு தொலைத்தொடர்பு இணைப்பு கிடைத்ததும் விமானங்கள் இயக்கப்பட்டன.

இதன் காரணமாக இன்று காலை சுமார் 2 மணி நேரம் விமான சேவை சேவை பாதிக்கப்பட்ட