காதல் திருமணத்திற்க்கு எதிர்ப்பு தன் சகோதரர் உட்பட இரண்டுபேர்  வெட்டி கொலை

 

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை தொண்டமா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன் இவர். அதே பகுதியை சேர்ந்த அம்மு என்ற பெண்னை நேற்று காதல் திருமணம் செய்து தனது வீட்டிற்க்கு காதல் மனைவியை அழைத்து வந்துள்ளார். திருமண கோளத்தில் வீட்டிற்க்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் சேட்டு மற்றும் சகோதரி அமுதா, நவீனை வீட்டைவிட்டு வெளியேற வற்புறுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த நவீன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சேட்டு மற்றும் அமுதாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அப்போது இதை தடுக்க வந்த சேட்டுவின் மனைவி சகுந்தலாவையும் அவர் கொடூரமாக வெட்டியுள்ளார்.இந்த கோர முடிவால் அம்மு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.பின்னர் சேட்டும் மற்றும் அவரது மனைவி சகுந்தலாவையும் அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சேட்டு இறந்தார் மேலும் சகுந்தலாவிற்க்கு தீவிர சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.பின்னர் இது தொடர்பாக சோளிங்கர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மாயமான நவீனை தேடிவருகின்றனர்.