எமன் கட்டளை விமர்சனம்

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில்,  எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரிப்பில், எஸ்.ராஜசேகர் திரைக்கதை இயக்கத்தில், அன்பு மயில்சாமி, சந்திரிகா, அர்ஜுனன் , ஆர்.சுந்தரராஜன், சார்லி, வையாபுரி, டெல்லி கணேஷ், சங்கிலி முருகன்,பவர் ஸ்டார் சீனிவாசன், நளினி , ஷகிலா, லதாராவ்,கொட்டாச்சி, கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா ஆகியோர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் எமன் கட்டளை.

அன்பு மயில்சாமியும் அர்ஜுனனும் நண்பர்கள் இவர்கள் செய்யும் ஒரு செயலால் சந்திரிகாவின் திருமணமே நின்று போய் விடுகிறது. அதனால் சந்திரிகாவும் அவளின் தந்தை டி.பி. கஜேந்திரனும் விஷம் குடித்து விடுகிறார்கள். 

இந்த விஷயம் தெரிந்து அன்பு மனம் வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட எமலோகம் செல்கிறார். 

எமதர்மராஜா உப்பை தின்றவன் தான் தண்ணி குடிக்க வேண்டும் அதனால் அந்த பெண்ணிற்கு நீ தான் மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார். மண்ணுலகம் வந்த அன்பு  சந்திரிகாவிற்காக மாப்பிள்ளை தேடி அலைகிறார்.

அன்பு மாப்பிள்ளை தேடி ஒரு புறம் அலைய சந்திரிகாவின் தாய் மாமனான கராத்தே ராஜா சந்திரிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.

ஆனால் சந்திரிக்காவிற்கு தாய்மாமன் மீது விருப்பமில்லை. அன்புவை சந்திரிகா காதலிக்கிறார். நான் அன்பு அதில் ஏற்றுக் கொள்ளாமல் விலகி நிற்கிறார்.

சந்திரிகாவிற்காக அன்பு பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் சில காரணங்களால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 59 நாட்களும் முடிந்துவிட்ட நிலையில் மீதம் ஒரு நாளில் இருக்கின்றது.

எமனின் கட்டளைப்படி சந்திரிகாவிற்கு மாப்பிள்ளை பார்த்து அன்பு மணமுடித்து வைத்தாரா? இல்லையா? இல்லை அன்பும் சந்திரிகாவும் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதே எமன் கட்டளை படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர். எஸ்.ஏ. கார்த்திகேயன்

இயக்கம் : எஸ்.ராஜசேகர்

ஒளிப்பதிவு : ஏ.கார்த்திக் ராஜா 

இசை : என்.சசிகுமார்

பாடல்கள் : சினேகன்

நடனம் : ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ,

மக்கள் தொடர்பு : வெங்கட்

கதை வசனம் : வி.சுப்பையன்