எஸ்.கே. அஜய் இயக்ககத்தில், பிரேம்ஜி, திவதர்ஷினி, தீபா சங்கர், வழக்கு என் முத்துராமன், சி.ஆர்.ரஜித், சூப்பர்குட் சுப்ரமணி, சுப்பிரமணியன் மாதவன், விது, போராளி திலீபன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வல்லமை.
நாயகன் பிரேம்ஜி மனைவியை இழந்த விவசாயி, தன்னுடைய மகளை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று சென்னைக்கு வருகிறார்.
வீடு, வேலை, மகளின் பள்ளி படிப்பு என்று அனைத்தும் பிரேம்ஜி நினைத்தது போலவே அமைகிறது. ஒரு நாள் மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டால் என்று நினைத்து மருத்துவர் தீபாவிடம் அழைத்துச் சென்று அம்மா இல்லாததால் என்ன என்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
ஆனால் மருத்துவர் தீபாவோ நீங்கள் நினைத்தது போல் உங்கள் மகள் பருவமடையவில்லை என்றும், அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்.
தனக்கு நேர்ந்த இந்த கொடுமை இனி யாருக்கும் நடக்க கூடாது, என்று எண்ணும் திவதர்ஷினி இப்படி செய்த அந்த மனித மிருகத்தை கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் என்று அப்பா பிரேம்ஜியிடம் சொல்கிறார். அப்பாவும் மகளும் சேர்ந்து அந்த குற்றவாளியை கண்டுபிடித்து கொலை செய்தனரா? இல்லையா? என்பதே வல்லமை படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து – பாடல்கள் – தயாரிப்பு – இயக்கம் : கருப்பையா முருகன்
இசை : ஜி.கே.வி
ஒளிப்பதிவு இயக்குனர் : சூரஜ் நல்லுசாமி
எடிட்டர் : சி கணேஷ் குமார்
கலை இயக்குனர் : எஸ்.கே. அஜய்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்