“டூரிஸ்ட் ஃபேமிலி” விமர்சனம்

பசிலியன் நசரத், முகேஷ் ராஜ், யுவராஜ் கணேசன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், யோகிபாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி, மாஸ்டர் கமலேஷ் ஜெகன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”.

சசிக்குமாரும், சிம்ரனும் இலங்கையில் ஏற்பட்ட விலைவாசி ஏற்றதாழ் அங்கு வாழ முடியாமல் தமிழகத்திற்கு ராமேஸ்வரம் வழியாக வருகிறார்கள்.  இவர்களுக்கு மிதுன் ஜெய்சங்கர், மாஸ்டர் கமலேஷ் ஜெகன், ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள்.

சிம்ரனின் தம்பியாக வரும் யோகி பாபு இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். 

அவர்களை சென்னைக்கு வர வைத்து காலணியில் வீட்டு வாடகைக்கு எடுத்து தங்க வைக்கிறார். 

அந்தப் பகுதி மக்களிடம் கேரளாவில் இருந்து வந்ததாக சொல்லும்படி சொல்லிவிட்டு செல்கிறார். அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் இடையே மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகி வருகிறார்கள் சிம்ரனும் சசிகுமாரும். 

இவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் குண்டு வெடிக்கிறது. இலங்கையில் இருந்து வந்த இவர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று காவல்துறை சந்தேகப்பட்டு இவர்களை தேட ஆரம்பிக்கிறது காவல்துறை. 

காவல்துறையின் சந்தேகம் உண்மையா? பொய்யா? சசிக்குமாரும், சிம்ரனும் எந்த வகையில் இதில் சம்பந்தப்பட்டார்கள் என்பதே படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : பசிலியன் நசரத், முகேஷ் ராஜ், யுவராஜ் கணேசன்

இயக்கம்: அபிஷன் ஜீவிந்த்

இசை : ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன்

படத்தொகுப்பு : பரத் விக்ரமன்

கலை இயக்குனர்: ராஜ்கமல்

மக்கள் தொடர்பு : யுவராஜ்